திண்டுக்கல், ஏப்.16- திண்டுக்கல் பேகம்பூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவா ஹிருல்லா பேசியிருப்பதாவது:
‘‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் திற்கு எதிராகப் போரிட்ட ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு திண்டுக் கல்லில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்று இராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன். எனது கோரிக் கையை அன்றைக்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலபாரதி, வழிமொழிந்து வலி மையாக பேசியதால் இங்கே ஹைதருக்கும், திப்புவிற்கும் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இரட்டை இலையில் போட்டியிடுகிறவர் வெற்றி பெற்றுவிட்டால் மத்தியில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் போது இங்கே போட்டி யிடுகிற அதிமுக அணி வேட்பாளர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்?
ஜூனைத் கான் வீட்டிற்கு சென்றது யார்?
திண்டுக்கல் அதிமுக அணி வேட்பாளர் இஸ்லாமியர்கள் வீடு களுக்கு சென்று தாய்மார்களை பார்த்து மணிக்கணக்கில் பேசுவ தாக கேள்விப்பட்டேன். இந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற பாஜக ஆட்சி எத்தனை தொல்லைகளை, துன்பங்களை கொடுத்தது?
நாமெல்லாம் ஈகைத்திருநாள் என்ற நோன்பு பெருநாளை மகிழ்ச்சி யோடு கொண்டாடினோம். இதே போன்றுதான் ஈகைத் திருநாளைக் கொண்டாடுவதற்காக ஜுனைத் கான் என்ற இளைஞர் தில்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் செல் லும் ரயிலில் ஏறினார்.
அந்த இளை ஞர் ரயிலில் கூட்ட நெரிசலில் கொஞ் சம் உட்காருவதற்கு இடம் தாருங் கள் என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். நான் ஜுனைத் கான் என்று சொன் னவுடன் இந்த பையில் என்ன வைத்திருக்கிறாய், மாட்டிறைச்சி தானே என்று கூறி அந்த ரயிலில் இருந்த மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். அந்த சம்பவத்திற்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சியின் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரி வித்தனர்.
போராட்டங்களை நடத்தி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினுடைய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் அந்த தாக்குதலில் பலியான ஜுனைத் கான் வீட்டுக்குச் சென்று அந்த இளைஞனின் தாய், தந்தை குடும்ப உறுப்பினர்களுக்கு நோன்பு திருநாளில் ஆறுதல் கூறி னார். அந்த நெகிழ்வான சம்ப வத்தை மறக்க முடியுமா? கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த சம்பவத்தை மறக்காமல் நினைவில் வைத்திருந்து, இந்த ஆண்டும் அதே ஈகை திருநாளில் ஜுனைத் கானின் குடும்பத்தின ருக்கு மீண்டும் ஆறுதல் சொன்னார் பிருந்தாகாரத்.
இந்த தொகுதியில் அதிமுக வில் போட்டியிடுகிற வேட்பாளர் தங்களது கட்சி அகில இந்திய அள வில் உள்ளதாக சொல்கிறார். அவர் கள் இந்த ஜுனைத் கான் வீட்டுக்கு போய் ஆறுதல் தெரிவித்தார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தாகாரத் அவர்கள் தான் சென்றார். அந்த கட்சியின் வேட்பாளர் தான் ஆர். சச்சிதானந் தம் உங்கள் தொகுதியில் போட்டி யிடுகிறார். அவர் தான் நமக்கு நெருக்கமானவர். நீங்கள் (எஸ்டி பிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்) இல்லை என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
புல்டோசரைத் தடுத்து நிறுத்திய பிருந்தாகாரத்
இஸ்லாமியர்களுக்கு பாது காப்பு அரணாக இருந்து வருவது மார்க்சிஸ்ட் கட்சி தான் என்று சொல்வதற்கு இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. தில்லியில் ஜோகேஸ் வரி என்ற ஒரு பகுதி உள்ளது. அங்கு ஏழை முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு நடைபெற்ற ஒரு ஊர்வலத்தில் சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது.
அதையொட்டி, ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள ஏழை முஸ்லீம் களின் வீடுகளை இடிப்பதற்காக புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப் போகிற சம்பவத்தைக் கேள்விப்பட்டு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார். தடை உத்தரவு இருக் கும் போது கூட அந்த பாசிச கும்பல் புல்டோசர்களை கொண்டு முஸ் லிம் வீடுகளை இடிக்க முயலும் போது, அந்த புல்டோசர் முன்பு துணிச்சலுடன் நின்று, தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியது எங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சகோதரி பிருந்தாகாரத் தான். (அது பற்றிய புகைப் படத்தை மேடையில் ஜவாஹி ருல்லா காண்பிக்கிறார்) அந்த கட்சி யின் வேட்பாளர் தான் ஆர். சச்சி தானந்தம்.
தில்லி எஜமானரும் எடப்பாடி பழனிசாமியும்
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தில் அதிமுகவின் 10 மாநிலங்க ளவை உறுப்பினர்களும், பாமக வின் ஒரு எம்.பி.யான அன்புமணி ராமதாசும் வாக்களித்ததன் கார ணமாகத்தான் குடியுரிமைச் சட்டம், சிஏஏ சட்டங்கள் நிறைவேறின. ஆனால் இந்த சட்டத்திற்கு எதி ராக நாடாளுமன்றத்திலும், மாநி லங்களவையில் கர்ஜனை செய் தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை மறக்க முடியுமா?
எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது இந்த சட்டங்க ளுக்கு தமிழ்நாட்டில் நாங்கள் அனு மதிக்க மாட்டோம் என்று தீர்மா னத்தை கொண்டு வர வேண்டும் என்று சொன்ன போது மறுத்து விட்டார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது அந்த தீர்மா னத்தை ஆதரித்து காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்துப் பேசின. ஆனால் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினால் எங்கே தில்லி எஜமான் கோவித் துக் கொள்வாரோ என்று சட்டசபை யிலிருந்து ஓட்டம் பிடித்தவர் தான் உங்கள் (எஸ்டிபிஐ வேட்பாள ரின்) அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி.
அந்த இரட்டை இலைச் சின்னத் தில் நின்று நீங்கள் வாக்கு கேட்கி றீர்கள். இது இஸ்லாமிய மக்க ளுக்கு இழைக்கிற துரோகம் இல் லையா?
2500 வழக்குகள் போட்டது எடப்பாடி ஆட்சி
இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமிய அமைப்பு கள் மற்றும் திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் மீதும் 2500-க்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. தில்லி ஷாகீன் பாக் போராட்டத்தை போல தமிழ் நாட்டிலும் போராட்டத்தை நடத் திய இஸ்லாமிய மக்கள் மீதும் பெண்கள் மீதும் இரவில் தடியடி நடத்தியது எடப்பாடி பழனிசாமி ஆட்சி.
இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைய முதல் வர் எடப்பாடி பழனிசாமியைச் சந் தித்துப் பேசிய போது வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று கூறிய வர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் முதல்வர் ஸ்டாலின் பொறுப் பேற்ற பிறகு அந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்து உத்தர விட்டார்.
இங்கே நாம் மதத்தை பார்க்க வில்லை. அம்பேத்கர் வகுத்தளித்த இந்த நாட்டின் அரசியல் சாச னத்திற்கு விசுவாசமாக ஜனநாய கத்தை பாதுகாக்க யார் பாடுபடு கிறார்களோ அவர்களைத் தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக விளங்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.