districts

img

தஞ்சை: மதுக்கடையை அகற்றக் கோரி மாணவர் சங்கத்தினர் மனு

தஞ்சாவூரில் கல்லூரி அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரிக்கு அருகில், அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இந்த மதுக்கடையை, உடனடியாக அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கிளை சார்பாக, சங்க நிர்வாகிகள் தமிழரசன், ஜெகன்ராஜ், எடிசன் மற்றும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;