தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, குண்டூர் குடியானத் தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை போடப்படாமல் இருந்தது. தற்போது 15-வது நிதிக் குழு மானியத்தில் சாலை போடும் பணி நடந்து வருகிறது. சாலை போடும் பணியை ஊராட்சி மன்றத் தலைவர் பழனி மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.