districts

img

ஓசூர் மற்றும் கெலமங்கலத்தில் நடைபெற்ற பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஓசூர் மற்றும் கெலமங்கலத்தில் நடைபெற்ற பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழகம் முழுதும் உள்ள 788 பட்டு விவசாயிகளுக்கு 19 கோடி 47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சிறு குறு மற்றும் நடுத்தர பட்டு தொழில்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினர். முன்னதாக ஓசூரில் கட்டப்பட்டுள்ள 4 கோடி மதிப்பில் ஒரு கோடி பட்டு முட்டைகள் பதப்படுத்தும் புதிய பல் நிலை குளிர் பதன அலகினை, தமிழ்நாடு அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சியர், மேயர் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.