வேலூர், ஆக.2-
திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழி லாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதல்வரின் கவ னத்தை ஈர்க்கும் வகையில், 2010 ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதி படி 84 பேருக்கும் 2013 இல் பணி நீக்கம் செய்யப்பட்ட 66 பேருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடு கள், குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க கவு ரவத் தலைவர் அய்.இளங்கோவன் தலைமை யில் பறை இசை முழக்கத்துடன் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் சேர்க் காட்டில் திரு வள்ளுவர் பல்கலைக்கழகம் செயல் பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட கலை,அறிவியல் கல்லூரி கள் இயங்கி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வ மில்லாமல் இப்பல்கலைக் கழகம் செயல்பட்டு வரு கிறது.
2010 இல் புதிய பல்கலைக்கழக கட்டிட திறப்பு விழாவின்போது, அன்றைய முதல்வர் கருணாநிதி 84 பேரை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
அதில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணி நீக்கம் செய்தது. இதுகுறித்து பல மனுக்கள் அளித்தும் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வேலூர் மாவட்ட முதன்மை தொழிலாளர் நீதிமன்றம் , உயர்நீதி மன்றமும் மீண்டும் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உத்தரவிட்டது. ஆனால், இதுவரையிலும் நீதிமன்ற உத்தரவை பல்கலைக்கழகம் நிறை வேற்றவில்லை.
பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து லஞ்சம், டெண்டர் முறைகேடு, மதிப்பெண் சான்றிதழ் குளறுபடிகள் மற்றும் பல்வேறு முறைகேடுகள் இப்பல்கலைக்கழகம் சிக்கியுள்ளதால் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
2 018 ஆம் ஆண்டில் பேராசிரியர் இளங்கோவன் தொடுத்த வழக்கில், 2022-ல் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், உயர் கல்வி துறையைச் சார்ந்த இளங்கோ ஹென்றி தாஸ் என்பவர் விசாரணை அதி காரியாக நியமித்து 3 மாதங்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்றது. ஆனால் ஒரு வருடமாகி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்த பிரச்சனைகள் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று ஆட்சிமன்றக்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்த பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்நாடு முதல்வரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த னர்.
பல்கலைக்கழக ஆசி ரியர் சங்கத்தின் மண்டலத் தலைவர் ஆசிப், மாவட்டத் தலைவர் பார்த்திபராஜா, தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன், செ. சரவணன் (ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ஒருங்கிணைப்பாளர் சு.குமார், இல.பிரதாபன் (அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம்), வி.குபேந்திரன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிவராமன் (வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.