தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு எழுதியுள்ள, சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல் கலாம் ஆசாத் பற்றி புத்தகத்தை புலிகேட் நேஷ்னல் மெட்டரிக் பள்ளியில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு 100 புத்தகங்களை புதனன்று (நவ 22) வழங்கப்பட்டது. இதில் தலைமையாசிரியர் குமாரி ஷீஜா, உதவி தலைமை ஆசிரியர் மோகன் அப்பள்ளியின் நிர்வாக அலுவலர் ரவிசந்திரன், கணித ஆசிரியர் ராதிகா, இயற்கை சமூக அறக்கட்டளை நிறுவனர் ஏகாட்சரம் மற்றும் பழவேற்காடு வார்டு உறுப்பினர் ஹாருன் பாஷா போன்றோர் விழாவில் கலந்து கொண்டனர்.