districts

img

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் ஏராளம்...

திருவண்ணாமலை, மார்ச் 18- தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளு மன்ற தொகுதிகளின் வரிசையில் 11 வது நாடாளுமன்ற தொகுதியான திருவண்ணாமலை  நாடாளுமன்ற தொகுதியில் வாழும் மக்கள்  விவசாய தொழிலையே  முழுமையாக நம்பி வாழ்கின்றனர். இந்த மாவட்ட மக்களுக்கு மட்டு மில்லாமல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,  கடலூர் ஆகிய மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஜீவநாடியாக விளங் கும் சாத்தனூர் அணையும்  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ளது. இத்தொகுதியில் உள்ள ஜவ்வாது மலையில் விளைவிக்கும் சிறுதானிய மான சாமை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திரு வண்ணாமலை நகருக்கு பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் வெளி  மாவட்டம் மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

15 லட்சம் வாக்காளர்கள் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம்  (தனி),கலசப்பாக்கம், கீழ்பென்னாத் தூர்,  ஆகிய  சட்டமன்ற தொகுதிகளை யும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை  உள்ளடக்கிய திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில்  7,49,000 ஆண் வாக்காளர்களும், 7,72,669 பெண் வாக்காளர்களும், 118 திருநங் கைகள் என  15, 21,787 மொத்த  வாக்காளர்கள் உள்ளனர் . இந்த நாடாளுமன்ற தொகுதியில்  உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளும் திமுகவை சேர்ந்தவர்களே தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

10முறை திமுக வெற்றி 

இத்தொகுதியில் இதுவரை நடை பெற்ற  தேர்தல்களில் திமுக 10 முறை யும், இந்திய தேசிய காங்கிரஸ்  4 முறை யும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1957 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திருவண்ணாமலை நாடாளுமன்ற  தொகுதியாக இருந்த  இத்தொகுதி திருப்பத்தூர் நாடாளு மன்ற தொகுதியாக மாற்றப்பட்டு,  2004 ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக இருந்து வந்தது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் மீண்டும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியாக மாற்றப்பட்டு 2009ல் நடை பெற்ற 15 வது  நாடாளுமன்ற  தேர்தல்  முதல்  திருவண்ணாமலை  நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.  2019ல் நடைபெற்ற 17 வது  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை விட  3,04,187 வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற திமுக  வை  சேர்ந்த சி.என்.அண்ணாதுரை   தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த 5 ஆண்டுகளில்  தொகுதியின் வளர்ச்சிக்காக நாடாளு மன்றத்தில் 507 கேள்விகளை எழுப்பி   தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில்  2 வது இடத்தில் உள்ளார். 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கு ஏடிஐபி  திட்டத்தில் மருத்துவ உபகரணங் களை வழங்கியதால் தென் இந்தியாவிலேயே அதிக மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொகுதி யாக திருவண்ணாமலை  நாடாளு மன்ற தொகுதி உள்ளது. கிராம சாலைகள் அதிமுள்ள தொகுதி பிரதம மந்திரி கிராம சாலை மேம் பாட்டு திட்டத்தில் தென்னிந்தியாவி லேயே மிக அதிகமான நீளத்திற்கு சாலை பணிகளை தேர்வு செய்து  அதை  பரிந்துரைத்து நிதிபெற்று  சாலை பணிகளை மேற்கொண் டுள்ளார்.

தொலைத்தொடர்பு அடிப்படை கட்டமைப்புகள்

தொகுதிக்கு உட்பட்ட  ஜவ்வாது மலை வாழும்  பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 98 பிஎஸ்என்எல் தொலைதொடர்பு  கோபுரங்கள் அமைக்க  அனுமதி பெற்று முதல் கட்டமாக 33 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது, 2 வது கட்டமாக 65 உயர் கோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மக்களின் கோரிக்கை  ஆன்மிக நகரமான திருவண்ணா மலைக்கு நேரடியாக சென்னையில் இருந்து  ரயில்சேவை அறிமுகப்படுத்த வேண்டும். சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு செல்லும் புதுச்சேரி - கிருஷ்ணகிரி (என்.எச் 66 )  சாலையில் திண்டிவனம்  முதல் கிருஷ்ணகிரி வரை சாலையை மேம்படுத்தும் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளது இவற்றை விரைந்து முடிக்க வேண்டும். செங்கம் சட்டமன்ற தொகுதி யில்  உற்பத்தியாகும் மலர்கள்   தினந் தோறும் கர்நாடக மாநிலத்திற்கு  அனுப்பப்படுகிறது. அதனால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொகுதியில்  வாசன திரவிய தொழிற் சாலை அமைக்க வேண்டும். செங்கம் மற்றும் கீழ்பென்னாத்தூர்,  திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி களில் அரசு கல்லூரி, கால்நடை மற்றும் வேளாண்மை கல்லூரிகளை அமைக்க வேண்டும்.

புதிய ரயில்பாதைகள்  அமைத்துதரக் கோரிக்கை 

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் வழியாக ஜோலார்பேட்டை வரை புதிய ரயில் பாதையும், திண்டிவம் முதல் கிருஷ்ணகிரி வரை திருவண்ணாமலை வழியாக  புதிய ரயில் பாதையும் அமைத்து ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும். ஆன்மீக நகரமான திருவண்ணா மலைக்கு உள்நாட்டு மக்கள் மட்டு மின்றி வெளிநாட்டு மக்களும் அதிக அளவில் வருவதால் திருவண்ணா மலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும். விவசாய கல்லூரி  செங்கம் சட்டமன்ற தொகுதியில் மூடப்பட்டுள்ள ஒன்றிய, மாநில விவசாய பண்ணைக்கு சொந்தமான 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாய கல்லூரி மற்றும் வேளாண்மை ஆராய்சி மையம் அமைக்கவேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதை பகுப்பாய்வு மையம் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் திருப்பத்தூர் தொகுதியில் மருத்துவக்கல்லூரி, சிப்காட் தொழிற் பேட்டை அமைத்து தரவேண்டும்.   கடலில் கலக்கும் தென்பெண்ணை யாற்றின் நீரை விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் செய்யாற் றையும் -தென்பெண்ணையாற்றையும்  இணைக்க வேண்டும் போன்ற எதிர்ப்புகள் நீண்ட காலமாக மக்களிடம்  உள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், தற்போது நடைபெறும் தேர்தலில் வெற்றிபெறும் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார் என பெரும்பாலான மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.          

- ஜே.எஸ்.கண்ணன்