தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் 3 மாத டி.ஏ வை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜி.பாஸ்கரன், கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், தமுஎகச மாவட்ட செயலாளர் கவிஞர் பால்கி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். காசிநாதன் ஆகியோர் பேசினர்.