districts

வில்லிவாக்கம் கோவிலில் மண் எடுத்து அரசியல் செய்த பாஜகவினர் கைது

சென்னை,ஆக.18-

      அயோத்தியில் கட்டப்படும் ராமர்கோயிலுக்கு வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து கைப்பிடி மண் எடுக்கப்போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர்.

      இவர்கள்  தேவையற்ற அரசியல் செய்து வருவதையொட்டி பல்வேறு தரப்பினர் இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று காலை பாஜக மாநில செயலாளர் வினோஜ்செல்வம் தலை மையில் ஒரு கும்பல் தடையை மீறி கைப்பிடி மண் எடுப்பதற்காக வில்லி வாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பாஜகவினரின் இந்த மலி வான அரசியல் பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியதாக சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.