100 நாள் வேலையில் பணி செய்து 50 நாட்கள் கடந்தும் ஏழு வாரங்களுக்கு சம்பளம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று கள்ளக்குறிச்சியில் ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் வேலு,ஆறுமுகம், முத்துவேல் மற்றும் வைத்தியலிங்கம், செல்வம், அறிவழகன், கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.