districts

img

சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணா நிலைப் போராட்டம்

திருவள்ளூர், ஜூன் 19- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது. ஒருங்கிணைப்பு குழுவின்  பேரவை கூட்டம் ஞாயிறன்று (ஜூன் 18), திருவள்ளூ ரில் புதுவாழ்வு திட்ட மாநில  தலைவர் ஆர். தமிழ்அரசு தலைமையில் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.மெல்கிராஜாசிங் சிறப்புரையாற்றினார்.தமிழ்நாடு வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மாநில  ஒருங்கிணைப்பாளர் கள் ஏ.நாகராஜ், டி.சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள்  வனிதா, திலகவதி, எசேக்கி யேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வட்டார ஒருங்கிணைப் பாளர்களுக்கு (பி.சி), மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், வட்டார இயக்க மேலாளருக்கு (பிஎம்எம்), மாதம் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், பணியாளர் களின் வங்கி கணக்கில் ஊதியத்தை நேரடி யாக செலுத்த வேண்டும்,  பெண் பணியாளர் களுக்கு மாதவிடாய் காலத்திலும், மகப்பேறு காலத்திலும் விடுமுறை வழங்க வேண்டும், செயலி (ஆஃப்) வருகை பதிவேடு பதிவு முறையை தவிர்க்க வேண்டும்,  பி.எப், இஎஸ்ஐ, இ.எல். சரண்டர், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை தமிழ்நாடு அரசு நிறை வேற்ற வலியுறுத்தி வரும் ஜூலை 29 ஆம் தேதியன்று சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணா நிலைப்போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.