districts

img

அரசு விதிகளை மீறிய கனரக லாரிகளுக்கு ரூ11.6 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம், செப். 4- வாலாஜாபாத் சுற்றுவட்ட பகுதிகளில் அரசு விதிகளை மீறி அதிபாரம் ஏற்றி சென்ற லாரிகளை வட்டாட்சியர், போக்குவரத்து அலுவலர், காவல்துறையினர் என அனை வரும் ஒருங்கிணைந்து ஆய்வு மேற் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல் குவாரிகள் மற்றும் அரவை தொழிற்சாலைகள் செயல் பட்டு வருகிறது. இதிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கன ரக லாரிகள் கட்டு மான பொருட்களை சென்னை மற்றும்  அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம்  செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங் களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இது போன்ற கனரக லாரிகள் அரசு  விதிகளை மீறி செயல்படுவதாக பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த  நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப் படி வட்டாட்சியர்கள் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் கள் ஒருங்கிணைந்து அவ்வப்போது விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் ஒன்பது லாரிகளும் ஆகஸ்ட் மாதம் 5 லாரி களும் செப்டம்பர் மாதம் தற்போது வரை மூன்று லாரிகள் என 17 லாரிகள் மீது அரசு  விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி பதினோரு லட்சத்து ரூ.60 ஆயிரம்  அபராதமாக விதிக்கப்பட்டு இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.