districts

img

தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொழிலாளர்களை பணி செய்ய விடாமல் வஞ்சிக்கும் சூப்பர்பில் நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் புதனன்று (செப் 11), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் கே.அர்ஜுனன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், மாநில துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம்,  துணை நிர்வாகிகள் ஜி.வினாயகமூர்த்தி, எஸ்.எம்.அனீப், எம்.நாகராஜன், எஸ்.குணசேகரன், எல்.கோபி, வி.குப்பன்,  சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.