கிருஷ்ணகிரி,செப்.19- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தில் பரிமாணப் பள்ளியில் இருந்து மஸ்திகானூர் செல்லும் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீண்ட நாட்களாக சீரமைக்காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பள்ளி வாகனங்கள், மாணவர்கள் பாதிக்கின்றனர். எனவே, உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.