திருவண்ணாமலை, பிப்.16- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி, தையல் இயந்திரம் வழங்கக் கோரி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வந்தவாசிக்கு வருகை வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பண்டியனிடம் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அ.அப்துல்காதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் ஆகியோர் மனுஅளித்தனர்.