districts

img

சமத்துவபுர குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி,அக்.7- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டா இல்லா பெரியார் சமத்துவபுரம் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பர்கூர் திருப்பத்தூர் பிரதான சாலையில் வெங்கடசமுத்திரம் அருகே   2009 ஆம் ஆண்டில் பெரியார் சமத்துவபுரம் கட்டப்பட்டது.14 ஆண்டுகள் கடந்தும் இந்த குடியிருப்புகளுக்கு  பட்டா வழங்கப்படவில்லை. . பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வீட்டை விரிவாக்கம் செய்ய வங்கி கடன் பெற முடியவில்லை. கட்டுமான பணிகளுக்கு அரசிடம் அனுமதி பெற முடியவில்லை.. எனவே, சமத்துவபுர குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன்,பர்கூர் வட்ட பொறுப்பாளர் டி.சீனிவாசன் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.