districts

img

கடலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர்,பிப்.7- கடலூர் மஞ்சக்குப்பத்தில் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் எதிரே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கடை வைத்திருந்தார். இதுபற்றி அறிந்த  நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளும்படி கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் விடுத்த னர். ஆனால் கடை உரிமையாளர், கடையை அகற்ற தடை  விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிர மிப்பு கடையை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.  இதையடுத்து, பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிர மிப்பு கடையை அகற்றினர். அதேபோல் கடலூர் தலைமை  தபால் நிலையம் முதல் கோண்டூர் வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைக்கப் பட்டிருந்த கடைகளையும் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.