districts

img

கடலூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கடலூர்,ஏப்.30- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் கடை வைத்துள்ள பெரும்பாலானோர் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் செவ்வாயன்று சுகாதார அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.