districts

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5 ஜி சேவையை வழங்க மறுப்பதா?

புதுச்சேரி,ஜன.23- ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்கும் வகையில் 4ஜி,5ஜி சேவை வழங்க மறுப்பதை கண்டித்து புதுச்சேரியில் பிஎஸ்என்எல்  தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதி ரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் ஊழி யர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பாளர் வி.ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிஎஸ்என் எல் ஊழியர் சங்கத் தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கொளஞ்சி யப்பன், கன்வீனர் சுப்பிர மணியன் உட்பட திரளான ஊழியர்கள் ஓய்வூ தியர்கள் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனர். இதேபோன்று  பிஎஸ்  என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை வழங்க வலியுறுத்தி கட லூரில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.