districts

ரயில்வே வலைத்தளம் முடக்கம்

சென்னை,ஜூலை 25-  

     நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி வலைத்தளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகிறது.  

   தினமும் லட்சக்கணக்கானவர்கள் இந்த வலைத் தளத்தை பயன்படுத்துகின்றனர். முன்பதிவு மட்டுமின்றி தட்கல் டிக்கெட் பெறவும், முன்பதிவை ரத்து செய்யவும் பெரு மளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ஐ.ஆர்.சி. டி.சி. வலைத்தளம் செவ்வாயன்று காலையில் சரிவர செயல் படவில்லை. அதன் வேகம் குறைந்ததால் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் வலைத்தளமும், செல்போன் செயலியும் முடங்கியது.  

  டெல்லியில் உள்ள இதன் தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை சரி செய்வதற்கு சில மணி நேரம்  ஆகும் வலைத்தளம்  செயல்பாடு சீராகும் வரையில் டிக்கெட்  கவுண்டர்களில் சென்று முன்பதிவு செய்யவும், ரத்து செய்ய வும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறினர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆஸ்க் திஷா வாய்ப்பை பயன் படுத்தி டிக்கெட் பெறலாம். இ-வாலட் என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு பயணிகள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்ளே நுழையலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.