districts

img

சாம்பலை விற்றதால் கிடைத்த ரூ.700 கோடி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு செலவிடப்படுமா ?

பொன்னேரி, பிப் 3- வல்லூர் அனல் மின் நிலையத்தில்   கழிவாக வெளியேற்றப்படும் சாம்பலை விற்றதன் மூலம்  கிடைத்த ரூ700 கோடியை யாவது ஒப்பந்த தொழிலா ளர்களின் நலனுக்காக ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில துணைத்தலைவர்  கே.விஜயன் வலியுறுத்தி யுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழக மும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகமும் இணைந்து  வல்லூர் அனல் மின் நிலையத்தை அமைத் துள்ளன. இங்கு  3அலகு களில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்கள் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சனிக் கிழமை (பிப்.3)  2 வது நாளாக  நுழைவு வாயில் முன்பு  தொழிலாளர்கள்  போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்தியில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் பேசுகையில், தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் தான்,  தொழிற்சாலை துறை இயங்குகிறது. அந்த துறை தான் ஒப்பந்த தொழி லாளர்களை வைத்து வேலை வாங்கலாம் என்று உரிமம் வழங்க வேண்டும். இதற்காக வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகம் 6 முறை தொழிற்சாலை துறையில் உரிமம் வாங்க  முயற்சித்துள்ளது. ஆனால் தொழிற்சாலை துறை அதற்கான அனுமதி வழங்கவில்லை. ஒரு நிரந்தரத் தொழிலாளர்கள் கூட இல்லை. அதுவும் உற்பத்தி துறையில் தொடர்ந்து ஒப்பந்த தொழி லாளர்களை அனுமதிக்க முடியாது என உரிமம் கொடுக்க மறுத்துள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையமாக இருந்தும் உரிமம் பெற  முடிய வில்லை. இது தொழிலாளர் களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இலவச மின்சாரம் 

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1700 நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.  வடசென்னை அனல் மின் நிலையமாவது இலவச மின்சாரத்திற்கு மின்சாரத்தை ஒதுக்குகிறது. ஆனால் இந்த மின்நிலையம்  எல்லாவிதமான சலுகை களையும் அனுபவித்துக் கொண்டு இலவச மின்சாரத் திற்கும் மின்சாரத்தை ஒதுக்காமல் லாபமீட்டக் கூடிய உற்பத்தி நிலைய மாக உள்ளது. இது போக சாம்பல் விற்ற பணம் மட்டும் ரூ.700 கோடி இருக்கிறது. இப்படி எல்லா நிலையி லும் வருவாய் ஈட்டும்  இந்நிறுவனம்  தொழிலாளர் களுக்கான உரிமையை மட்டும் வழங்க மறுத்து வருகிறது. நிர்வாகத்திற்கு வரும் லாபத்தில், ஒரு  விழுக்காடு கூட தொழிலா ளர்களுக்கு ஒதுக்கவில்லை.  இதனால் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே அவர்கள் பணியாற்றி வரும்  அவலமான நிலை தொடர்கி றது.  இந்த நிலையில்தான் 2 ஆயிரம் ஒப்பந்த தொழி லாளர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாக்க  வேண்டும் என்ற கோரிக் கையை முழங்கி , அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தர தொழிலாளர்கள் என ஒன்றிய பாஜக அரசு அறிவிக்க  வேண்டும் என  வலியுறுத்தி கடந்த 2 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெற்று வரு கிறது. வல்லூர்  அனல் மின் நிலையம் உற்பத்தியை துவக்கிய காலத்தில் இருந்து இன்று வரை தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளா கியுள்ளனர்.  தினமும்  சாம்பலை தின்று தொழி லாளர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அனல் மின் நிலையம் உள்ளே சென்றாலே சளி பிடித்து விடுகிறது. இன்னும் பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி பல்வேறு சிரமங்க ளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இந்த  போராட்டம் நடைபெறு கிறது என்று கே.விஜயன் கூறினார்.   இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகி சலில்குமார்  உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.