districts

img

சங்கராபுரத்தில் காவல் உட்கோட்டம் பொதுமக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி, நவ.3 - குற்றங்களை தடுக்க சங்கராபுரத்தில் காவல் உட்கோட்டம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 58 கிராமங்கள் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பாக மது,மற்றும் போதை பொருட்கள் விற்பது என குற்றச்செயல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொலை,கொள்ளை சங்கராபுரம் பகுதி யில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஆகையால் சங்கராபுரம் காவல் உட்கோட்டம் உருவாக்கி காவல்துறை கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும் எனவும் அதேபோல் சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறையும் உள்ளது. எனவே குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினந்தோறும் நடை பெற்றுக் கொண்டிருக்கும் குற்றத்தை தடுக்க முன் வருவாரா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடைய எதிர்பார்ப்பாக உள்ளது.