districts

img

விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது

சென்னை, பிப். 6- அமோனியா வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற  விதிகளை மதிக்காத நிறுவனங் களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி இரவு  அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப் பாயத்தில் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகுமார் அமர்வில் செவ்வாயன்று (பிப். 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுகட்டுபாட்டு வாரி யம் தரப்பில், அமோனியா கசிவுக் கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கபட்ட, குழு தனது அறிக்கையில் 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா எடுத்து சென்றதே கசிவுக்கு காரணம் என கண்டுபிடித்துள்ளது.  மேலும் அந்த பகுதியில் வேறு  எந்த நிறுவனமும் இல்லாத நிலை யில், கோரமண்டல் நிறுவனம் விபத்துக்கான பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே விபத்துக்கான காரணம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் கசிவை தடுக்க நிறுவ னத்தின் உள்ளே மட்டும் தாணி யங்கி கருவிகள் பொறுத்தபட்டுள்ள தாகவும், மற்ற பகுதிகளில் தானி யங்கி கருவிகள் பொறுத்தப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமோனியம் கசிவுக்கு காரண மான கோரமண்டல் போன்ற விதி களை மதிக்காத நிறுவனங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என என்று திட்டவட்ட மாக மாசு கட்டுப்பாட்டு வாரியம்  சார்பில் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப் பட்டது. நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 1996ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருவதாகவும், நிறு வனத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படவில்லை என்றும், பாதுகாப்பு நடவடிக்கையாக 35 தானியங்கி கருவிகள் நிறுவனத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளதாகவும், 150 ஒலி எழுப்பான்கள் பொறுத்த பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டது. மேலும் மாசு கட்டுப்பாட்டு அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, முன்னெச் சரிக்கை விதிகளின் படி அந்த நிறுவனம் செயல்படவில்லையா? விபத்தின் போது தானியங்கி கருவி கள் செயல்பாட்டில் இருந்ததா? நிறுவனத்திற்கு வெளியே தானி யங்கி கருவிகள் செயல்பாட்டில் இல்லையா? என்ற கேள்விகளுக்கு கோரமண்டல் நிறுவனம் பதிலளிக்க  உத்தரவிட்டு இந்த வழக்கு விசா ரணை மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.