வேலூர், ஜூலை 17 -
வேலூர் மாவட்டம், காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ. 10 கோடி 81 லட்சத்தில் மாவட்ட உள்விளை யாட்டு அரங்கம் மற்றும் ரூ. 19 கோடியில் நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்தின் அடிப்படை தேவைகள் குறித்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் ஆகியோரிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், இது தொடர்பான விவ ரங்களை விரிவான அறிக்கையுடன் விளை யாட்டுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பு மாறும் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “காட்பாடியில் அமைக்கப்படும் விளையாட்டு மைதானத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தி தமிழ்நாட்டின் முதல் விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாண வர்கள் தங்கி படிப்பதற்கு தேவையான தங்கும் விடுதிகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.