கள்ளக்குறிச்சி, பிப்.22 - உளுந்தூர்பேட்டை அஜீஸ் விளை யாட்டு மைதானத்தை பேருந்து நிலையம் அமைக்க கையகப்படுத்துவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1984 இல் நெய்வேலி அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்காக அங்கி ருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மக்கள் உளுந்தூர்பேட்டை அருகே ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் குடிய மர்த்தப்பட்டனர். 2400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஒரு ஆரம்பப்பள்ளி இருக்கிறது. இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கரில் காவலர் பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. அஜித் நகர் கிராம பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின்னர்தான் அந்த பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் தனியார் தோல் தொழிற்சாலைக்காக இம்மக்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கையகப் படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தையும் கையகப்படுத்தி பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உதரவின் பெயரில் அரசு அதிகாரிகள் பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிலத்தை அளவீடும் செய்துள்ளனர். இதனை அறிந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். விளையாட்டு மைதானத்தை சுற்றி கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டு மைதானம் நிரந்தரமாக எங்களுக்கு வேண்டும் எனவும் அரசு எங்களுக்கு ஒதுக்கிய நிலங்களை கையகப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் கிராமப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்கள் வாழ்வாதார இடங்களை அரசு பயன்பாட்டிற்கு கையகப்படுத்துவதை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வரு கின்றனர்.