கிருஷ்ணகிரி,ஆக.26- சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி பேருந்து நிறுத்த பகுதியை ஆக்கிரமிப்பு செய்த முன்னாள் வார்டு உறுப்பினர் கழிவறை ஒன்று கட்டியுள்ளார். இதற்காக இரண்டு குழிகளை தோண்டி உள்ளது. இது சாலை ஓரத்தில் பேருந்துக்காக நிற்கும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்தும் மூடப்படவில்லை. இதனால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த இடத்தில் தெருவிளக்கு வசதியும் கிடையாது. இதனால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது, இதனால் பலர் இந்த குழிகளுக்குள் தவறி விழுந்து காயமடைந்தனர். பொது மக்களும், பேருந்து பயணிகளுக்கு இடையூறாக இருந்து வரும் மரண குழிகளை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பதாகை (பேனர்) ஒன்றும் வைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இதனால், மக்களை திரட்டி போராட்டம் திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.