districts

img

அரசு பள்ளிக்கு ரூ.61 லட்சத்தில் புதிய கட்டிடம்

கல்பாக்கம், மார்ச் 14- சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.61 லட்சம் மதிப்புள்ள தொடக் கப்பள்ளி புதிய கட்டிடத்தை நிலைய இயக்குநர் சுதிர் பி ஷெல்கே பங்கேற்று திறந்து வைத்தார்.  திருக்கழுக்குன்றம் ஒன்றிய நத்தம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி கட்டிடம்  வேண்டுமென ஊராட்சி மன்ற  தலைவர் சேகர் கோரிக் கையை ஏற்று  புதியதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி கட்டிடத்தை நத்தம் கரியச்சேரி ஊராட்சி மன்ற  தலைவரும், திருக்கழுக் குன்றம் ஊராட்சி ஒன்றிய  தலைவர்களின் கூட்டமைப் பின் தலைவருமான கரியச்சேரி சேகர் முன்னி லையில் சென்னை அணு மின் நிலைய இயக்குநர் சுதிர்  பிஷெல்கே  குத்துவிளக் கேற்றி  வைத்து மாணவர் களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.   நிகழ்ச்சியில் திருக்கழுக் குன்றம் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சூரிய பிரபா உமாசங்கர், சமூக ஆர்வலர்கள் மோகன் குமார், அரசு செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.