தேசிய அளவில் அகில இந்திய சிவில் சர்வீஸ் கோ-கோ போட்டி புதுடில்லியில் அக்டோபர் 16 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் 13 அணிகளும், ஆண்கள் பிரிவில் 17 அணிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் புதுச்சேரி மகளிர் அணி இரண்டாம் பரிசினையும், ஆடவர் அணி ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசினையும் வென்றது. பரிசு பெற்ற அணியினர் புதுச்சேரி விளையாட்டு துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.