districts

img

ஆதார் அட்டைக்காக பரிதவிக்கும் நரிக்குறவர் மாணவர்கள்

ராணிப்பேட்டை, ஜூலை 8 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், செங்கனாவரம் கிராமம் நரிக்குறவர் காலனியில் 55 குடும்பங்கள் உள்ளன. இங்கு  வசிக்கும் சிலருக்கு ஆதார் அட்டை இல்லை. இதனால் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க  முடியவில்லை.  மேலும் இங்கு வசிக்கும் சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நிலம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். சிலர் பட்டா இன்றி தவித்து வருகின்றனர்.  குறிப்பாக சில மாணவர்களுக்கு ஆதார் அட்டை இன்றி பள்ளிக்குச் செல்வது கேள்விக்குறியாக உள்ளது. சிலர் குடும்ப அட்டை இன்றி தவித்து வருகின்றனர். எதிர் வரும் மழைக் காலத்திற்கு முன்பு தங்கு வதற்கு இலவச தொகுப்பு வீடுகள் ஏற்பாடு செய்து தரவும் கோரிக்கை வைத்துள்ளார். தகவல் அறிந்து ஞாயிறன்று (ஜூலை 7)  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கட்சியின் கலவை தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு நரிக்குறவர்களை நேரில் சந்தித்து  பேசினார். அப்போது மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் விரைவில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.