districts

img

தொழில்நுட்பம் தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது

சென்னை, பிப்.20- கேஒய்என்வுட் டெக்னோ லாஜிஸ் நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதள மான கே.ஒய்.என் சென்னை யில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.   ஹைப்பர்-லோக்கல் முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத் தின் அனைத்து தரப்பு  மக்களையும் ஒன்றிணைக் கும் முறையில் உருவாக்கப் பட்டுள்ளது என்று மாநில  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் கூறி னார். இந்த செயலியைத் தொடங்கி வைத்து பேசிய அவர்,  கேஒய்என் என்பதன் விரிவாக்கம் - Know Your Neighbourhood என்றார். “ தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங் கள் மட்டுமில்லாது தனி  நபர்களுக்கும் முன்னேற் றத்தை அளித்துள்ளது. குறிப்பாக   தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் படிப்பதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலை மாறி, தற்போது பட்டயக் கல்வி யைக் கூட இலவசமாக இணையத்தில் படிக்க  முடிகிற நிலை ஏற்பட்டுள் ளது என்றார். ஒரு சமூக வலைதளத் தால் ஆரோக்கியமான இணைய சமூகம், இணைய பயன்பாடு நிச்சயம் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இந்த கேஒய்என் செயலியை அறிமுகப்படுத்தி நிறுவனத் தின் தலைமை செயல் அதிகாரி காயத்ரி தியாக ராஜன் பேசினார். அறிமுக விழாவில், பிரபல டென் னிஸ் வீரர்  விஜய் அமிர்த ராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.