districts

img

கொரட்டூரில் மழை வெள்ள பாதிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

அம்பத்தூர், டிச. 9- அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மிக்ஜம் புயலால் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த 580 மி.மீ. அதி கன மழையால் அம்பத்தூர் சலவையாளர் நகர், கருக்கு  மின்சார வாரிய காலனி, கொரட்டூரில் வீட்டு வசதி குடி யிருப்பு, வடக்கு கொரட்டூர்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. அதேபோல் சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் அமைச்சர்  அன்பில் மகேஸ், கொரட் டூர் சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீர் பாதிப்புகளைப் பார்வை யிட்டு அதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கொரட்டூர் ஏரி பகுதியில்  இணையும் கால்வாயையும், கொரட்டூர் ஏரியையும்  ஜீரோ பாயிண்ட் பகுதியையும் பார்வையிட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனே அகற்று வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு எட்டுவதற்கான கருத் துகளை பொதுமக்களிட மும், அரசு அலுவலர்களிட மும் கேட்டறிந்தார்.  கொரட்டூர் 68ஆவது தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி யுள்ளதைப் பார்வையிட்டு, விரைந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு அரசு அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்த னர்.