districts

img

வாணியம்பாடியில் மரப்பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் பெரும் தீ விபத்து

திருப்பத்தூர்,மே 12- வாணியம்பாடி அடுத்த  கோணாமேடு பகுதியில் ஏஜாஸ் மற்றும் இர்பான் ஆகியோருக்குச் சொந்த மான மரப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் தோல் தொழிற் சாலை செயல்பட்டு வருகி றது. மேலும், தொழிற்சாலை யின் பின்புறம் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோனும் உள்ளது. இந்நிலையில், தொழிற் சாலையின் பின்புறம் ஏரிக் கால்வாயில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இந்த தீயானது, தொழிற் சாலையின் பின்புறம் வைக் கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடோனில் உள்ள பிளாஸ்டிக், தோல் மற்றும் மரச் சாமான்களிலும் பரவியது, சிறிது நேரத்தில் தீ தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காணப்பட்ட நிலையில், இத்தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள்  வாணியம்பாடி தீயணைப் புத் துறையினருக்கு தகவல்  அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத் திற்கும் மேலாக போராடி தீயை அணைக்க முற்பட்ட னர். ஆனால், தீயை அணைக்க முடியாததால், ஆம்பூர் தீயணைப்பு வாக னம் மற்றும் டிராக்டர்  மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஒரு மணி நேரத்திற் கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தொழிற் சாலையின் பின்புறம் அதிக அளவு தீப்பற்றி எரிந்த நிலையில், அப்பகுதி பொதுமக்களே கடப்பாரை கொண்டு சுவரை இடித்துத் தள்ளி தீயை அணைக்க உதவி செய்தனர். ஆனால், அதற்குள் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்பி லான பொருட்கள் முழுவது மாக தீயில் எரிந்து சேத மடைந்தது. மேலும், இந்த  தீ விபத்து குறித்து வாணி யம்பாடி நகர காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.