districts

img

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் தொழிலாளர் வைப்பு நிதி நிர்வாகம் இழுத்தடிப்பு

கிருஷ்ணகிரி, பிப்.3 – தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஓசூரில் சிப்காட் தொழிற்சாலைகள் சங்க அலுவலக வளா கத்தில் நடைபெற்றது. தனியார் தொழிற்சாலை யில் பணி ஓய்வு பெற்றோர் 450  பேர் உயர் ஓய்வூதியத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மனு அளித்து உயர் பென்சன் ஆணைக்காக காத்துக் கொண்டுள்ளனர். அதற்கான காப்புத்தொகை கட்டுவதற்கும் தயாராக உள்ளனர். ஆனால் தொழி லாளர் வைப்பு நிதி நிர்வாகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பைஅமல்படுத்தாமல் 2 ஆண்டுகளாக இழுத்த டித்து வருகிறது. டிடிகே தொழிற்சாலையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒரு வருக்கு மட்டும் கடந்த ஓரா ண்டாக உயர் பென்சன் கிடைத்து வருகிறது. இந்நிலையில் உயர் பென்சனுக்கு உடனடியாக இபிஎப்ஃஓ நிர்வாகம்  அனுமதி கடிதம் வழங்க வேண்டும், இனியும் காலம் கடத்தக் கூடாது என வலியுறுத்தி இபிஎஃப் 95 சங்க மாநில இணை செயலாளர் உமாகாந்தன், ஓசூர் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், தேன்சாமி தலைமையில் 450 பேர்  மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உயர் ஓய்வூதியத்துக்கு நிர்வாகத்தில் இருந்து அனுமதி கடிதம் அளிக்க நடவடிக்கை எடுத்து வரு வதாகவும்,விரைவில் உயர் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.