கிருஷ்ணகிரி, ஜூலை 1- ஓசூர் பணிமனை கிளை பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்த தோழர். எம்.சண்முகம் பணி நிறைவு பாராட்டு விழா ஓசூரில் தோழர்.கே.எம்.ஹரிபட் அரங்கில் நடைபெற்றது. சென்னையில் அரசு போக்குவரத்து தொழிலாளி யாக 27ஆண்டுகளுக்கு முன்புபணியை துவங்கிய சண்முகம் ஓசூரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்துநராக திறம்பட பணியாற்றியவர். சிஐடியு முன்னணி தலைவராக, மத்திய சங்க நிர்வாகி தொழி லாளர்களை ஒருங்கிணைத் தவர், சிபிஎம் உறுப்பினராக களப்பணியாற்றிய அவர் பணிநிறைவு பெற்றார். இந்நிகழ்வில் சங்க தலைவர் அருண், செயலா ளர் கோவிந்தன், பொரு ளாளர் வின்சென்ட் தலைமை தாங்கினர். சிஐடியு மாநில செயலாளர் நாகராஜன், அரசு போக்குவரத்து மண்டல செயலாளர் எஸ்.சண்முகம், துணைச் செயலாளர் கே.பிரபாகரன், சிஐடியு மாவட்ட செயலா ளர் ஸ்ரீதர், சிபிஎம் மாநகர செயலாளர் சி.பி. ஜெய ராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணி ஓய்வு பெறும் எம்.சண்முகம் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.2ஆயிரம் நன்கொடை வழங்கினார்.