districts

img

கொத்தடிமைகள் மீட்பு: மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாராட்டு!

திருவண்ணாமலை,நவ.3-  ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த மதனபள்ளியில் உள்ள கல்குவாரியில் கொத்தடிமைகளாக அடைபட்டிருந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நன்றி தெரி வித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காளி யம்மாள். இவரது கண வர் சந்திரசேகர் (50). மகன் ராமன்(30) மரு மகன் ராமகிருஷ்ணன் ஆகி யோர் கல் உடைக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் சந்திரசேகர், ராமன், ராமகிருஷ்ணன் ஆகி யோர் கடந்த ஒரு ஆண்டாக சித்தூர் அடுத்த மதனபல்லியில் உள்ள ஒரு கல்குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். கல்குவாரியில் உள்ள ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சித்திர வதை செய்வதாகவும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத் தால் தான் வெளியே அனுப்புவேன்,  இல்லையெ னில் இங்கேயே கொத்த டிமைகளாக கல் உடைக்க வேண்டும் என்று கல்கு வாரி உரிமையாளர் வேணு என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வெளியம்பாக்கத்தில் உள்ள காளியம்மாள் குடும்பத்தி னருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,

தனது கணவர், மகன், மற்றும் மரு மகன் ஆகியோரை கொத்தடி மையாக உள்ள கல்குவாரி யில் இருந்து மீட்க வேண் டும் என, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தலைமையில் செய்யாறு கோட்டாட்சியர் அனாமிகா வின் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், வந்த வாசி வட்டாட்சியர் பொன்னு சாமி, டிஎஸ்பி ராஜூ ஆகி யோரிடம் மனு அளிக்கப் பட்டது. அதிகாரிகள் விரைவான நடவடிக்கையால் கல்குவாரியில் கொத்தடி மைகளாக இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட கல் உடைக்கும் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரி வித்தனர்.  இது குறித்து வந்த வாசி வட்டாட்சியர் அலு வலகத்தில் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், கல்குவாரி யில் கொத்தடிமைகளாக இருந்த பட்டியலின மக்களை துரிதமாக மீட்க நடவடிக்கை மேற்கொண்ட, செய்யாறு கோட்டாட்சியர் அனாமிகா, வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றி  தெரிவித்துக் கொள்வதாக, கூறினார்.  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வட்டார செய லாளர் அப்துல் காதர், இடைக்குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், சுகுமார், வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர்.