விழுப்புரம்,அக்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டக் குழு உறுப்பினரும், மாவட்ட அலுவலகச் செயலாளருமான கு.வீரமணியின் தாயார் அன்னக்கிளி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். புதுச்சேரி மாநிலம், பி.எஸ்.பாளையம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடை கமிட்டி செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் வெகுஜன அமைப்பு தலைவர்கள் உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.