திருவள்ளூர், செப் 24- அரசு நிலத்தில், விவசாயம் செய்து வந்த காக்கவாக்கம் ஆதிதிராவிடர் மக்கள் வெளியேற்றப்பட்டது குறித்து இரண்டு தரப்பினருடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என சிபிஎம் தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகில் உள்ள காக்கவாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த கிராமத்தில் ஏரியின் வெளியே கரடுமுரடாக கிடந்த அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை சீர்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றினர். பின்னர் அந்த நிலங்களை உழுது, இயற்கை உரமிட்டு, ஏரி தண்ணீரை பாய்ச்சி இரண்டு போகம் நெல் நடவு செய்து வந்தனர். இவ்வாறு கடந்த 50 ஆண்டுகளாக விவசா யம் செய்து, அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். தற்போது திடீரென அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆடு, மாடுகளை மேய்க்க இடமில்லை எனக்கூறி அரசு நிலத்தில் சாகுபடி செய்துள்ளவர்களை வெளி யேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊத்துக் கோட்டை வட்டாட்சியரிடம் புகார் செய்துள்ள னர். இதனை தொடர்ந்து உழவு செய்ய வேண்டிய நேரத்தில், இந்த நிலத்தில் யாரும் பிரவேசிக்க கூடாது என அறிவிப்பு பலகையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து ஆதிதிராவிடர் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் டி.பன்னீர்செலவம், ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், கிளை செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் கொண்ட குழு வெள்ளியன்று (செப்-22), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை நேரடியாக சந்தித்து பேசினர். அப்போது இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி உரிய தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.