திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் புதனன்று (ஏப்.17) ஆலந்தூரில் நடைபெற்றது. பிரச்சரத்தை நிறைவு செய்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா பேசினார். திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், சிபிஎம் தொகுதி பொறுப்பாளர் க.பீம்ராவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.