வேலூர், மார்ச் 21- விஐடி பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான 2 நாள் இலக்கிய கருத்தரங்கம் வியாழனன்று (மார்ச் 21) நடைபெற்றது. விஐடி வேந்தர் டாக்டர்.கோ. விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகை யில், எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் சமு தாயத்தின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்கள் தான் மக்கள் மனதில் தாக்கத்தையும், மாற்றத்தையும் உருவாக்க முடியும். இதனால் சமூகத்தில் நல்ல மாற்றமும் வளர்ச்சியும் இருக்கும் என்றார். இது போன்ற எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமானால் மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் நிறைந்த வளர்ச்சி இருக்கும் என்றார்.கர்நாடகாவை சேர்ந்த எழுத்தாளரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான ஜெயந்த் கைகினி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், இளைய தலைமுறையினர் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் மதிப்பை வளர்ப்பதுக்கொள்ள வேண்டும், மேலும் இரக்ககுணம், சமயோஜித சிந்த னைகளை மக்கள் மனதில் இலக்கியத்தின் வாயிலாக வளர்க்க முடியும் என்றார். கருத்தரங்கில் எழுத்தாளர் மீனா கந்த சாமி, விஐடி பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.