மதுரை, ஏப்.20- 18-ஆவது நாடாளு மன்றத் தேர்தல் தமிழ் நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19 வெள்ளியன்று நடைபெற்றது. இதில், மதுரை அய்யர் பங்களா பகுதியில் உள்ள சேவியர் மேல்நிலைப் பள்ளியில் வணிகவரிப் பத்தி ரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வாக்களித்தார். அப்போது செய்தி யாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘தமிழக முதல் வரின் சாதனைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தமிழ் நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லா தொகுதிகளிலும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம், தேனி, விருதுநகர் நாடாளு மன்ற தொகுதி, மிகப்பெரிய வெற்றி பெற்று 40 தொகுதி களிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்’’ என்றார்.