சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தனசேகர் (57) மூளைச்சாவு அடைந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மரியாதை செலுத்தினார். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர் ஜென்னத் சுகுந்தா, நிலைய மருத்துவ அலுவலர் வனிதா மலர் ஆகியோர் உடனிருந்தனர்.