திருவண்ணாமலை,மே 29- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, பதினோரு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் களில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை, கல்வித் துறை ஆகிய வற்றின் மூலம் உயர்கல்விக் கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணா மலை பிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ் கர பாண்டியன் இந்நிகழ்வை தொடங்கி வைத்து பேசினார். 122 மாணவ, மாணவியர் களுக்கு பயிற்சி அளிக்கப் பட்ட இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் ராம்தாஸ், தனி வட்டாட்சி யர், இலங்கை தமிழர் மறுவாழ்வு சஜேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.