districts

img

சாம்சங் தொழிலாளர்கள் சாலை மறியல் காஞ்சிபுரத்தில் காவல்துறை அராஜகம்!

காஞ்சிபுரம், அக். 1 - சாம்சங் தொழிலாளர்கள் தாங்கள் தொடங்கியுள்ள தொழிற்சங்கத்தை நிர் வாகம் அங்கீகரித்து பேச்சு நடத்த வேண்டும் என்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சிஐடியு சார்பில் செவ்வாயன்று (அக்.1) தமிழ கம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் தலை மையில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தை சீர் குலைக்க ஏராளமான காவல்துறை யினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  போராட் டம் துவங்குவதற்கு முன்பே தொழி லாளர்களை  கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். கட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்ட காவல்துறை  இந்நிலையில் காவல்துறையினர் சிஐடியு அலுவலகம் மட்டுமல்லாது, காஞ்சிபுரம் மாவட்ட சிபிஎம் அலு வலகத்தையும் முற்றுகையிட்டு திட்ட மிட்டு பதற்றத்தை உருவாக்கினர்.  தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட  செயலாளர் கே.நேருவை காவல்துறை யினர் ஒருமையில் பேசி கைபேசியை பிடுங்கிக்கொண்டு அராஜகமான முறையில் கைது செய்து  சின்ன காஞ்சி புரம் காவல் நிலையத்தில் அடைத்த னர்.  விளக்கடி கோயில் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தின் வாச லில் நின்று கொண்டு அலுவலகத்திற்கு யார் யார் வருகிறார்கள் என்று வேவு பார்த்தனர். சிலர் சீருடையிலும் சிலர் சீருடை அணியாமலும் நிறுத்தி வைக்க ப்பட்டிருந்தனர். ஜனநாயக முறை யில் இயங்கும் அரசியல் கட்சி அலு வலகத்தை வேவு பார்ப்பது ஏராள மான காவலர்களை குவித்து பதற் றத்தை உருவாக்கும் காவல்துறைக்கு சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க பிரச்சனையை அந்தந்த மட்டத்தில் தீர்ப்பதற்கு பதிலாக காவல்துறை மூலம் தலையீடு செய்து அடக்க முயற்சிப்பதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கண்டித்து வருகின்றனர். சாம்சங் தொழிலாளர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக, சட்டப்பூர்வமான உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தொழிலாளர்கள் கடந்த 3  வாரங்களுக்கு மேலாக சம்ப ளத்தை இழந்து, உரிமைகளை நிலை நாட்ட போராட்டம் நடத்தி வருகின்ற னர். அவர்களின் பிரச்சனைக்குது தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தொழிலாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தி கைது செய்வது சரியான நடைமுறை அல்ல. தொழில் அமை தியை அரசே கெடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கால தாமதம் செய்யாமல்,  தொழிலாளர் பிரச்சனைக்கு உடனடி சுமூகமான தீர்வை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்  கேட்டுக் கொண்டுள்ளார்.