வேலூர், ஜூலை 23-
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி.சத்ய நாராயணன் தலைமை தாங்கினார்.
அகில இந்திய தலைவர் ரமேஷ்சுந்தர், பொதுச் செயலாளர் செயலாளர் சாந்தனு சாட்டர்ஜி, மாநில பொதுச் செயலாளர் விவேகானந்தன் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் பேசினார்.
பொதுக்குழு
மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு 8மணிநேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும், மருந்து விற்பனை பிரதிநிதி களை நெருக்கடியில் சிக்க வைக்கும் முறை யற்ற வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், குறைந்த பட்சம் ஊதியமாக ரூ.26000 உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழ் நாடு அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும் நிறுவனங் களை மறுசீரமைப்பு என்ற பெயரில் மூடி, வேறு பெயரில் துவங்கி பிரதிநிதிகளை வேலை நீக்கம் செய்வதை உடனடியாக கைவிடவேண்டும்.
அனைத்து மருந்து விற்பனை பிரதிநிதி களுக்கும் வேலை நியமன உத்தரவு, வைப்பு நிதி, போனஸ், மருத்துவ காப்பீடு அனைத் தையும் வழங்க வேண்டும், மருந்து நிறுவனங்களால் மருந்து விற்பனை பிரதி நிதிகளுக்கு ஏற்படும் வேலைப்பளுவை குறைத்திடும் வகையில் ஒன்றிய அரசு முத்தரப்பு கமிட்டியை கூட்டி சட்டப்படி யான வேலை விதிமுறையை நிர்ணயம் செய்ய வேண்டும், சிறுபான்மை மற்றும் தலித், பழங்குடி மக்கள் மீது அரங்கேற்றும் தாக்குதல்கள் மற்றும் மணிப்பூரில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனக்கலவரத்தை தடுத்து நிறுத்தாமல் மவுனம் காக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.