districts

img

சென்னையில் பறக்கும் தட்டு காவல்துறை அதிகாரியே சொன்னதால் பரபரப்பு

சென்னை,ஜூலை 31-

   சென்னை அடுத்த முட்டுக்காடு கடல் பகுதியில் கடந்த 26-ந்தேதி மாலை யில் மர்மமான முறையில் நான்கு பறக்கும் தட்டுகள் வானில் பறந்ததாக கூறப்படு கிறது. இந்த பறக்கும் தட்டுகளை ஓய்வு பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். மனைவியுடன் முட்டுக்காடு கடற்கரையில் மாலை 5.30 மணி அளவில் அமர்ந்திருந்த போது தான் பிரதீப் பிலிப்பின் கண்ணில் நான்கு ஒளி தென்பட்டுள்ளது. உடனடி  யாக தனது ஐபோன் மூலமாக அவர் அதனை படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்த போது அதில் பறக்கும் தட்டு போன்று நான்கு உருவம் தெரிந்துள்ளது. இதை பார்த்து வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த அவர் அந்த புகைப்படங்களை தற்போது வெளி யிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் உள்ளவை டிரோன் போலவோ சிறிய விமானம் போலவே இல்லை. இந்தியாவிலேயே முதல்முறை யாக எடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்றார்.  

   இது தொடர்பாக பறக்கும் தட்டு ஆராய்ச்சியாளரான சபீர் உசேன் கூறிய தாவது:- பறக்கும் தட்டுகள் ஆராய்ச்சி களில் உலக நாடுகள் அனைத்துமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பறக்கும் தட்டுகளை தற்போது ஏலியன்ஸ்கள் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தான் அதிகம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.. எனவே முட்டுக்காட்டில் பறந்த பறக்கும் தட்டு தொடர்பாக ஆராய்ச்சி யாளர்கள் உரிய ஆய்வு செய்தால் பறக்கும் தட்டுதானா? அது நோட்டம் பார்ப்பதற்காக விடப்பட்டதா? என்பதெல்லாம் நமக்கு தெரியாது. இது தொடர்பாக உரிய ஆராய்ச்சிகளை நடத்தி இனிதான் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.