அம்பத்தூர், ஜன. 13- அம்பத்தூர் புழல் சாலை யில் நங்கநல்லூரைச் சேர்ந்த ஆனந்தன் என்ப வருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், வெளிநாட்டு மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விநி யோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக் கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த குடோ னில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித் தனர். இதையடுத்து அம்பத்தூர், செங்குன்றம், பெரம்பூர், வியாசர்பாடி, ஆவடி, கொளத்தூர் மற்றும் செம்பியம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து புழல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாச மானதாகக் கூறப்படுகிறது.