கிருஷ்ணகிரி,டிச.30- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல் சாகு படிக்கு அடுத்தபடியாக தக்காளி,கத்தரி, பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட்,கேரட் சாகுபடி அதிகமாக செய்யப்படு கிறது. குறிப்பாக தேன்கனிக்கோட்டை, ஆலப்பட்டி குரும்பட்டி,ஜம்புத்,பேரிகை சூளகிரி காவேரிப்பட்டினம் போச்சம்பள்ளி பகுதிகளில் அவரைக் கொடி அமோகமாக விளைவதால் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இங்கு விளைபவை சேலம்,சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அவரை விளைச்சல் அமோகமாக உள்ளதால் நேரடி விற்பனை விலை கிலோவுக்கு குறைந்த பட்சம் 60 முதல் ரூ.80 வரை கிடைக்கிறது. இதனால் அவரை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.