districts

img

காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன

காஞ்சிபுரம், ஏப்.14- காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி  சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிறு வேடல் க.செல்வத்துக்கு ஆதரவாக காஞ்சி புரம் வணிகர் வீதியில்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் 7 வது முறையாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தி ருக்கிறார். தமிழகத்திலேயே குடியி ருந்தாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது. தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்ற ஆசைப்படுகிறது. ஆனால் காலே இல்லையென்ற நிலையில் எப்படி கால் ஊன்ற முடியும் என்பதே எனது கேள்வியாகும். திமுக அரசு செயல்படுத்தி வரும் பல மக்கள் நலத்திட்டங்கள் மிகுந்த பாராட்டுக்குரியதாகவே இருக்கின்றன. காலை உணவுத் திட்டம் வந்த பிறகு பள்ளி யில் பயிலும் மாணவர்களிடையே சாதியம் ஒழிந்துள்ளது. சமூக நீதியை கற்கும் அளவிற்கு இத்திட்டத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை உணவுத் திட்டத்தின் நன்மை களை பிற மாநிலங்களும் தெரிந்து கொண்டு அவைகளும் செயல்படுத்த தொடங்கி விட்டன. மேலும் காஞ்சி புரத்தில் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்க ளுக்கு மாதம் தோறும் முறையாக அவர வர்களது வங்கிக் கணக்கு வந்து விடு கிறது என்று  கி.வீரமணி பேசினார். இக்கூட்டத்திற்கு திக மாவட்டத் தலைவர் முரளி தலைமையேற்றார். திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், தி.மு.க. மாணவரணிச் செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், விசிக மாவட்டச் செயலாளர் மதி ஆதவன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் சீனி வாசன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் அல்லா பக்ஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.