districts

img

ரூ1 கோடி செலவில் டிஜிட்டல் நூலகம் கே.பி.சங்கர்எம்எல்ஏ அடிக்கல்

சென்னை, ஆக. 23-

      எண்ணூரில் ரூ 1 கோடி செலவில் கட்டப்படவுள்ள டிஜிட்டல் நூலகத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அடிக்கல் நாட்டினார்.

      எண்ணூர் கத்திவாக்கத்தில் 1962ஆம் ஆண்டு 800 சதுர அடியில் கிளை  நூல கத்தை அப்போதைய முதலமைச்சர் பக்த வச்சலம் திறந்து வைத்தார். புதிய கட்டிடம் கட்டி அந்த நூலகத்தை டிஜிட்டல் முறை யில் மேம்படுத்த வேண்டும் என  பொது மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

     இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ1 கோடி ஒதுக்கி உள்ளார். இதையடுத்து 3,000 சதுர அடி யில் கீழ் தளம், மேல் தளம் நூலகத்திற்காக கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதனன்று (ஆக. 23) நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பி னர் கே.பி.சங்கர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

    இந்த நூலகம் மூலம் எண்ணூரை சுற்றியுள்ள கத்திவாக்கம் தாழங்குப்பம் உட்பட 8 மீனவர் கிராமங்களும் பல்வேறு கிராம மக்களும் பயன்பெறுவார்கள். இந்த நூலகத்தில் தற்போது 6,000 வாசகர் களும் 50,000 புத்தகங்களும் உள்ளதாக வும் இது டிஜிட்டல்  நூலகமாக  மாற்றப்படு வதால் மாணவர்கள் உயர்கல்வி படிக்க வும்,  போட்டி தேர்வுகள்  எழுதவும்  பய னுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கோமதி, கே.பி.சொக்கலிங்கம்,  மாவட்ட நூலக அதி காரி திருஞானசம்பந்தம், நூலகர் பேனிக்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.