districts

img

அம்மூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள்

ராணிப்பேட்டை,ஆக.10-

     ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் ரூ.1.92 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.80லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் வெட்டப்படும் பணி, 13-வது வார்டில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை உலர்த்திட உலர் களம் அமைக்கும் பணி, ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்பில் தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை வைக்கும் குடோன் அமைக்கும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.69லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அல்லிகுளம் சாலை அமைக்கும் பணி, நரசிங்கபுரம் பகுதியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணி என மொத்தம் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி புதனன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.